Friday, February 4, 2011

தலைவனின் ஏக்கத்தை அறிந்த வெண்ணிலா,
கதிரவனை அணைக்க இயலாமல், போதும் உன் உலா,
இன்று போய் நாளை வா, இனிதே உந்தன் நிறைவு,
என்றது, கதிரவனுக்கோ தலைவியை காண நேரம் குறைவு,
கொண்டவன் பகலிலும், கொண்டவள் இரவிலும்,
சந்திக்கும் நேரமோ கடுகின் சிறியது,
வானுலக காதலனும் காதலியும் பிரிந்த பின்னே,
நிலத்தில் காதல் மலரும், நேரம் அது,
கொண்டவனை பிரிந்த ஏக்கத்தில் காதலி,
நிலத்தில் மலரும் காதலை எண்ணி ஏங்குகிறாள்,
காதலியின் பிரிவிலும் கடமை தவறாத காதலன்,
கட்டி அணைத்தால் மட்டும் தான் காதலா ?
அறியாமையில் உறங்கும் உலகம்,
எங்கும் அமைதி ...எதிலும் அமைதி ....!

No comments:

Post a Comment