Saturday, February 19, 2011

சின்ன உலகுத்துக்குள்ள நிறைய வம்பு,
பச்சோந்திக்கு வேணுமாம் காளை கொம்பு.
கொஞ்சம் காசுக்கு எவ்ளோ நெரிய ஆசை,
மேல இருக்கறவனுக்கு கூட இல்ல பூசை,
மனுஷனுக்கு நாய் பொழப்பு தானுங்க,
சுய மரியாதைக்கு, பஞ்சம் தானுங்க,
பொண்டாட்டி புள்ளைக்கு சொத்து சேக்க,
எல்லார் பேச்சையும் சும்மாவே கேக்க,
வேதனை எல்லாம் மறந்து போச்சு,
வெட்கமும் சேத்து பறந்து போச்சு..
ஆறடி குழில புதைக்கறதுக்கு முன்னாடி,
அப்பவும் புடிச்சு பாப்பன் வெட்டியான் உன் நாடி,
இங்க அது கூட இல்லீங்க, வேரோட
கொன்னுட்டு, வேர பொழப்பு பாப்பாங்க !

No comments:

Post a Comment