Thursday, February 10, 2011

நாடறிந்த வீரராம்,
நற்பண்பு மிக்க சூரராம்,
தர்மர் மூத்தவராம்,
வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்
சக உதரராம்,
அன்னை சொல் கேட்டு, பெண்ணை
பங்கிடுவார்,
பகடை காய் ஆக்கி, சபையில் ஆடை
களைய கண்டிடுவார்,
அங்கு கணவனா கண் கண்ட கடவுள் ?
வந்தவன் உயிரையும் காத்தவன், கறுவுள்,
அவ மதிக்க பட்ட மங்கையோ
அழைத்தது அண்ணனை, அந்த கண்ணனை ...!

No comments:

Post a Comment