பூவ தேடி போறது பொன் வண்டு,
பூண்டு வாங்க மார்க்கெட் க்கு போறது சர்வண்டு [ servant ]
side la sida la போறது கடல் நண்டு,
side la sida la போறது கடல் நண்டு,
வேல வெட்டி இல்லாம இத படிக்கிறியே மண்டு மண்டு ! ;)
Thursday, July 14, 2011
Wednesday, June 15, 2011
Saturday, February 19, 2011
சின்ன உலகுத்துக்குள்ள நிறைய வம்பு,
பச்சோந்திக்கு வேணுமாம் காளை கொம்பு.
கொஞ்சம் காசுக்கு எவ்ளோ நெரிய ஆசை,
மேல இருக்கறவனுக்கு கூட இல்ல பூசை,
மனுஷனுக்கு நாய் பொழப்பு தானுங்க,
சுய மரியாதைக்கு, பஞ்சம் தானுங்க,
பொண்டாட்டி புள்ளைக்கு சொத்து சேக்க,
எல்லார் பேச்சையும் சும்மாவே கேக்க,
வேதனை எல்லாம் மறந்து போச்சு,
வெட்கமும் சேத்து பறந்து போச்சு..
ஆறடி குழில புதைக்கறதுக்கு முன்னாடி,
அப்பவும் புடிச்சு பாப்பன் வெட்டியான் உன் நாடி,
இங்க அது கூட இல்லீங்க, வேரோட
கொன்னுட்டு, வேர பொழப்பு பாப்பாங்க !
பச்சோந்திக்கு வேணுமாம் காளை கொம்பு.
கொஞ்சம் காசுக்கு எவ்ளோ நெரிய ஆசை,
மேல இருக்கறவனுக்கு கூட இல்ல பூசை,
மனுஷனுக்கு நாய் பொழப்பு தானுங்க,
சுய மரியாதைக்கு, பஞ்சம் தானுங்க,
பொண்டாட்டி புள்ளைக்கு சொத்து சேக்க,
எல்லார் பேச்சையும் சும்மாவே கேக்க,
வேதனை எல்லாம் மறந்து போச்சு,
வெட்கமும் சேத்து பறந்து போச்சு..
ஆறடி குழில புதைக்கறதுக்கு முன்னாடி,
அப்பவும் புடிச்சு பாப்பன் வெட்டியான் உன் நாடி,
இங்க அது கூட இல்லீங்க, வேரோட
கொன்னுட்டு, வேர பொழப்பு பாப்பாங்க !
Thursday, February 17, 2011
காதலிக்க நேரம் இருந்தது அன்று,
அப்பொழுதோ வாழ்க்கை அறியா கன்று.
காத்திருக்க ஒருத்தி, காக்க வைக்க ஒருத்தி,
வெட்டிவிட ஒருத்தி, விளையாட ஒருத்தி,
வேண்டா வெறுப்பாக இன்னொருத்தி,
பொய் உரைத்த ஒருத்தி, பகலுக்கு ஒருத்தி,
மனதுக்கு ஒருத்தி அன்று இல்லை ,
அவனோ, தீராத விளையாட்டு பிள்ளை,
இன்று..... காலம் சந்தர்ப்பம் ஒன்றை தந்தது,
காலமே கேள்வி கேட்டு
காலமே பதிலும் தந்தது ...
இதையும் கடந்து போம்....
அப்பொழுதோ வாழ்க்கை அறியா கன்று.
காத்திருக்க ஒருத்தி, காக்க வைக்க ஒருத்தி,
வெட்டிவிட ஒருத்தி, விளையாட ஒருத்தி,
வேண்டா வெறுப்பாக இன்னொருத்தி,
பொய் உரைத்த ஒருத்தி, பகலுக்கு ஒருத்தி,
மனதுக்கு ஒருத்தி அன்று இல்லை ,
அவனோ, தீராத விளையாட்டு பிள்ளை,
இன்று..... காலம் சந்தர்ப்பம் ஒன்றை தந்தது,
காலமே கேள்வி கேட்டு
காலமே பதிலும் தந்தது ...
இதையும் கடந்து போம்....
Thursday, February 10, 2011
நாடறிந்த வீரராம்,
நற்பண்பு மிக்க சூரராம்,
தர்மர் மூத்தவராம்,
வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்
சக உதரராம்,
அன்னை சொல் கேட்டு, பெண்ணை
பங்கிடுவார்,
பகடை காய் ஆக்கி, சபையில் ஆடை
களைய கண்டிடுவார்,
அங்கு கணவனா கண் கண்ட கடவுள் ?
வந்தவன் உயிரையும் காத்தவன், கறுவுள்,
அவ மதிக்க பட்ட மங்கையோ
அழைத்தது அண்ணனை, அந்த கண்ணனை ...!
நற்பண்பு மிக்க சூரராம்,
தர்மர் மூத்தவராம்,
வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்
சக உதரராம்,
அன்னை சொல் கேட்டு, பெண்ணை
பங்கிடுவார்,
பகடை காய் ஆக்கி, சபையில் ஆடை
களைய கண்டிடுவார்,
அங்கு கணவனா கண் கண்ட கடவுள் ?
வந்தவன் உயிரையும் காத்தவன், கறுவுள்,
அவ மதிக்க பட்ட மங்கையோ
அழைத்தது அண்ணனை, அந்த கண்ணனை ...!
கொண்டவனாம் கோவலனை எண்ணி
பெற்றாளாம் பெண் பிள்ளை, மணிமேகலை
காதலனை பிரிந்த ஏக்கத்தில் கலை துறந்து
துறவறம் பூண்ட மாதவி இங்கிருக்க,
திரும்பியன் மடியில் சாய்ந்து அங்கிருக்க,
மகிழ்ந்த மங்கை, அவனை இழந்தால் களவுக்கு,
சிறு பெண் பிள்ளை ஒன்றே அந்த நிலவுக்கு...
எரித்தவளுக்கு எல்லா ஊரிலும் சிலம்புடன் சிலை,
பத்தினியான மாதவிக்கு ஒன்றுமே இல்லை !
பெற்றாளாம் பெண் பிள்ளை, மணிமேகலை
காதலனை பிரிந்த ஏக்கத்தில் கலை துறந்து
துறவறம் பூண்ட மாதவி இங்கிருக்க,
திரும்பியன் மடியில் சாய்ந்து அங்கிருக்க,
மகிழ்ந்த மங்கை, அவனை இழந்தால் களவுக்கு,
சிறு பெண் பிள்ளை ஒன்றே அந்த நிலவுக்கு...
எரித்தவளுக்கு எல்லா ஊரிலும் சிலம்புடன் சிலை,
பத்தினியான மாதவிக்கு ஒன்றுமே இல்லை !
Friday, February 4, 2011
தலைவனின் ஏக்கத்தை அறிந்த வெண்ணிலா,
கதிரவனை அணைக்க இயலாமல், போதும் உன் உலா,
இன்று போய் நாளை வா, இனிதே உந்தன் நிறைவு,
என்றது, கதிரவனுக்கோ தலைவியை காண நேரம் குறைவு,
கொண்டவன் பகலிலும், கொண்டவள் இரவிலும்,
சந்திக்கும் நேரமோ கடுகின் சிறியது,
வானுலக காதலனும் காதலியும் பிரிந்த பின்னே,
நிலத்தில் காதல் மலரும், நேரம் அது,
கொண்டவனை பிரிந்த ஏக்கத்தில் காதலி,
நிலத்தில் மலரும் காதலை எண்ணி ஏங்குகிறாள்,
காதலியின் பிரிவிலும் கடமை தவறாத காதலன்,
கட்டி அணைத்தால் மட்டும் தான் காதலா ?
அறியாமையில் உறங்கும் உலகம்,
எங்கும் அமைதி ...எதிலும் அமைதி ....!
கதிரவனை அணைக்க இயலாமல், போதும் உன் உலா,
இன்று போய் நாளை வா, இனிதே உந்தன் நிறைவு,
என்றது, கதிரவனுக்கோ தலைவியை காண நேரம் குறைவு,
கொண்டவன் பகலிலும், கொண்டவள் இரவிலும்,
சந்திக்கும் நேரமோ கடுகின் சிறியது,
வானுலக காதலனும் காதலியும் பிரிந்த பின்னே,
நிலத்தில் காதல் மலரும், நேரம் அது,
கொண்டவனை பிரிந்த ஏக்கத்தில் காதலி,
நிலத்தில் மலரும் காதலை எண்ணி ஏங்குகிறாள்,
காதலியின் பிரிவிலும் கடமை தவறாத காதலன்,
கட்டி அணைத்தால் மட்டும் தான் காதலா ?
அறியாமையில் உறங்கும் உலகம்,
எங்கும் அமைதி ...எதிலும் அமைதி ....!
Thursday, February 3, 2011
அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு
வெற்றிடம் மட்டுமே வெளிச்சம்,
ஏனோ அதை தாண்டி பார்க்க அச்சம்,
இதே நிலா நாளையும் இருக்குமா ?
இதே போல் என்னை பார்த்து சிரிக்குமா ?
இக்கணம் போல என்றும் சிலிர்க்குமா ?
எண்ணிய என் வாக்கும் பலிக்குமா ?
அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு,
வெற்றிடம் மறந்து,
வெண்ணிலவே இன்று விடியலானது ..!
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு
வெற்றிடம் மட்டுமே வெளிச்சம்,
ஏனோ அதை தாண்டி பார்க்க அச்சம்,
இதே நிலா நாளையும் இருக்குமா ?
இதே போல் என்னை பார்த்து சிரிக்குமா ?
இக்கணம் போல என்றும் சிலிர்க்குமா ?
எண்ணிய என் வாக்கும் பலிக்குமா ?
அத்தனை அழகா பௌர்ணமி நிலா ?
இத்தனை நாள் வானத்தை பார்த்தவனுக்கு,
வெற்றிடம் மறந்து,
வெண்ணிலவே இன்று விடியலானது ..!
Tuesday, February 1, 2011
Boot Licking - An interim art of adopting morally unacceptable practises combined with realization by self, with greatest deterioration to self-respect, for reasons as faster growth, monetary benefits, career progression and suppression of guilt, which could lead to the evolution of phsically acceptable yet ethically dislikable human pattern by corporate organisms.
Thursday, January 27, 2011
எடுத்த அவதாரமோ ஒன்பதுடன் ஒன்று,
வேதத்துக்கு ஒரு மச்சம், மீட்டதும் அன்று,
விடத்தை விழுங்க ஒருவன், கடைய கூர்மம்,
பூவுலகம் காக்கும் வராஹமும், அவன் கர்மம்,
நரசிம்மன், சினத்துக்கு, ஒரு பாதி மிருகம்,
மூன்று அடி கேட்ட வாமனனும் மானிட வர்க்கம்,
தந்தை சொல் மந்திரத்துக்கு ஒரு பரசுராமன்,
அவனே மகன், கணவன், அரசன், ஒருத்திக்கே ராமன்,
கள்வனும் அவனே, காப்பவனும் அந்த கண்ணனே,
பலராமனும் ஒருவன், கண்ணனுக்கு அண்ணனே,
கல்கி அவன் பெயர், கலியுகத்திற்கு ஒன்றே முடிவு,
புதியதோர் உலகம் தழைக்க, அவனே தீர்வு !
வேதத்துக்கு ஒரு மச்சம், மீட்டதும் அன்று,
விடத்தை விழுங்க ஒருவன், கடைய கூர்மம்,
பூவுலகம் காக்கும் வராஹமும், அவன் கர்மம்,
நரசிம்மன், சினத்துக்கு, ஒரு பாதி மிருகம்,
மூன்று அடி கேட்ட வாமனனும் மானிட வர்க்கம்,
தந்தை சொல் மந்திரத்துக்கு ஒரு பரசுராமன்,
அவனே மகன், கணவன், அரசன், ஒருத்திக்கே ராமன்,
கள்வனும் அவனே, காப்பவனும் அந்த கண்ணனே,
பலராமனும் ஒருவன், கண்ணனுக்கு அண்ணனே,
கல்கி அவன் பெயர், கலியுகத்திற்கு ஒன்றே முடிவு,
புதியதோர் உலகம் தழைக்க, அவனே தீர்வு !
தென்றல் வந்து போன சுவடா தெரியும் ?
அணைக்க வந்த அந்த நெருப்பா எரியும் ?
காதலியாகவே இருக்க அவள் ராதையும் அல்ல,
கட்டியவனே கடவுள் என்கிற சீதையும் அல்ல,
எல்லாம் தெரிந்து இருந்தும், கேட்க மாட்டாள்,
அத்தனை கோபம் இருந்தும் வெளி காட்டாள்,
உண்மையை சொல்ல மனமும் மறுக்கிறது,
சொல்ல கூடாதென்று உதடும் தடுக்கிறது ..
செய்த தவறுகளுக்கு...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே போகட்டும் கண்ணனுக்கே...
அணைக்க வந்த அந்த நெருப்பா எரியும் ?
காதலியாகவே இருக்க அவள் ராதையும் அல்ல,
கட்டியவனே கடவுள் என்கிற சீதையும் அல்ல,
எல்லாம் தெரிந்து இருந்தும், கேட்க மாட்டாள்,
அத்தனை கோபம் இருந்தும் வெளி காட்டாள்,
உண்மையை சொல்ல மனமும் மறுக்கிறது,
சொல்ல கூடாதென்று உதடும் தடுக்கிறது ..
செய்த தவறுகளுக்கு...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே போகட்டும் கண்ணனுக்கே...
Wednesday, January 26, 2011
If all was for butter and bread,
If things were never the way as said,
If you believe to be the one for change,
If they make you stand at firing range,
If you can face the guns, straight up,
If you fill with confidence your life’s cup,
If you not fear rejections for today,
If you can stand up to all that they say,
If you can treat life and death, equal,
If you don’t make failures your sequel,
Yours is the earth, and what’s even more,
You will be the one to show them the Door!
Be a Man, My Son!
If things were never the way as said,
If you believe to be the one for change,
If they make you stand at firing range,
If you can face the guns, straight up,
If you fill with confidence your life’s cup,
If you not fear rejections for today,
If you can stand up to all that they say,
If you can treat life and death, equal,
If you don’t make failures your sequel,
Yours is the earth, and what’s even more,
You will be the one to show them the Door!
Be a Man, My Son!
அடி மனத்திலும் ஆழமாய் பதிந்தாலும்
பகை கொண்டு மனம் எரிய நேர்ந்தாலும்
அவளால் எரிந்த மதுரை எரிந்தது தான்,
சினத்தால் அழிந்த நகரம் அழிந்தது தான்,
எரிய நேர்ந்தாலும் விளக்காய் இரு,
கரைய நேர்ந்தாலும் உப்பாய் இரு,
பிரிய நேர்ந்தாலும் உயிராய் இரு ,
சரிய நேர்ந்தாலும் கனி மரமாய் இரு,
உயிரை சில நாள் சுமக்கும் பொய்யான உடலே மெய் ..
உன் காட்சி முடியும் முன்னே முடிந்தது செய்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ....
பகை கொண்டு மனம் எரிய நேர்ந்தாலும்
அவளால் எரிந்த மதுரை எரிந்தது தான்,
சினத்தால் அழிந்த நகரம் அழிந்தது தான்,
எரிய நேர்ந்தாலும் விளக்காய் இரு,
கரைய நேர்ந்தாலும் உப்பாய் இரு,
பிரிய நேர்ந்தாலும் உயிராய் இரு ,
சரிய நேர்ந்தாலும் கனி மரமாய் இரு,
உயிரை சில நாள் சுமக்கும் பொய்யான உடலே மெய் ..
உன் காட்சி முடியும் முன்னே முடிந்தது செய்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ....
Friday, January 21, 2011
பேசாமலேயே இருக்க பெருமாளும் இல்லை,
நயமாக நல்லதை சொல்ல நக்கீரனும் இல்லை,
அரங்கேற்றமும் நாடகமும் இனிதே நடந்தது,
காலமும் கடவுளை போல அமைதியாய் கடந்தது,
நல்ல நண்பனுக்கும், தோழிக்கும் ஒன்றே விதி,
...உனக்கும் அவனுக்கும் மட்டுமே நடந்தது தெரியும்,
ஆண்டவனுக்கு மட்டுமே அத்தனையும் புரியும்,
சபை கலையட்டும்....
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ...
நயமாக நல்லதை சொல்ல நக்கீரனும் இல்லை,
அரங்கேற்றமும் நாடகமும் இனிதே நடந்தது,
காலமும் கடவுளை போல அமைதியாய் கடந்தது,
நல்ல நண்பனுக்கும், தோழிக்கும் ஒன்றே விதி,
...உனக்கும் அவனுக்கும் மட்டுமே நடந்தது தெரியும்,
ஆண்டவனுக்கு மட்டுமே அத்தனையும் புரியும்,
சபை கலையட்டும்....
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ...
Subscribe to:
Comments (Atom)